முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி.. இந்த ஒரு காரணத்திற்காக எடுத்த முடிவு..!

பிரபல தொகுப்பாளினியான டிடி தனது விவாகரத்து செய்ததற்கான காரணத்தை மனம் திறந்து பேசியுள்ளார்.

தொகுப்பாளர் டிடி

பிரபல ரிவியில் பல நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் தான் டிடி. தற்போது சீரியல், படங்கள் என நடித்து வருவதுடன், சில படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.

திவ்யதர்ஷினி கடந்த 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். பின்பு வெறும் 3 ஆண்டுகளில், அதாவது 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர்.

விவாகரத்திற்கான காரணத்தை அவர் இதுவரை தெரிவிக்காமல் இருந்த டிடி சமீபத்தில் அளித்த பேட்டியில் அதனை கூறியுள்ளார்.

’அந்த சமயத்தில் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் விவாகரத்து முடிவை எடுத்தேன், அந்த முடிவு எனக்கு கஷ்டமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் தான் அந்த முடிவை எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

தான் விவாகரத்து ஆனவர் என்பதை மக்கள நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் நான் அதை நினைவில் வைத்துள்ளேன். அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக நான் வேலைகளில் பிஸியானேன் என்றும் தெரிவித்தார்.

திவ்யதர்ஷினி விவாகரத்தாகி ஏழு வருடங்கள் ஆகிய போதிலும் இன்னும் சிங்கிள் ஆகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *